சென்னை ரயில்சேவை மாற்றம்: 32 மின்சார ரயில்களின் சேவை மாற்றம் – தெற்கு ரயில்வே – Zee Hindustan தமிழ்

சென்னைச் செய்திகள்

பரமரிப்பு பணிகளுக்காக சென்னை மின்சார ரயில்களின் சேவை மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், மாற்றப்பட்டுள்ள ரயில் சேவைகளின் விவரத்தை நேரத்துடன் வெளியிட்டுள்ளது.  

* சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணி, 7.45 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

* சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணி, 10 மணிக்கும், மதியம் 3.50 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

* நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க | ரயில்வே அமைச்சர் அளித்த மிகப்பெரிய தகவல்: பெண் பயணிகளுக்கு கிடைக்கும் கன்ஃபர்ம் சீட்!!

* சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும், மாலை 6.35 மணிக்கும், இரவு 8.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

* கூடூர்-சூலூர்பேட்டை இடையே மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* ஆவடி-சென்டிரல் இடையே அதிகாலை 4.25 மணிக்கும், காலை 6.40 மணிக்கும், இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

* சென்டிரல்-ஆவடி இடையே இரவு 9.15 மணிக்கும், இரவு 11.30 மணிக்கும், இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 7.30 மணிக்கும், காலை 10.10 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே செல்லும். 

* சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 8.35 மணிக்கும், மாலை 3.30 மணிக்கும், இரவு 7.05 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் எழவூர் வரை மட்டுமே செல்லும்.

* சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே காலை 10 மணிக்கும், மதியம் 1.20 மணிக்கும், மதியம் 3.20 மணிக்கும். இரவு 8.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

* சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே காலை 11.35 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும், இரவு 9.40 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் சூலூர்பேட்டை-எளாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க | IRCTC: திருவிழாவுக்கு ஊருக்கு போக ஈஸியா ரயில் டிக்கெட் புக் செய்யலாம்

* சென்னை கடற்கரை-சூலூர்பேட்டை இடையே மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே செல்லும். 

* சூலூர்பேட்டை-வேளச்சேரி இடையே மாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source: https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-32-electric-trains-service-timing-changed-and-cancellation-details-411686