சென்னை, தருமபுரி, செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை, தருமபுரி, செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை தாக்கிய மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்துதான் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை, தருமபுரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjE0MTjSAQA?oc=5