கனமழை எதிரொலி – காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை… – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

பரவலாக மழை பெய்து வரும் காரணத்தால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் கடந்த வாரம் மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே கரையை கடந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை நீடித்து வருகிறது. மேலும் அரபிக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiQFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy90YW1pbC1uYWR1L3JhaW4tY29udGludWVzLXRvLWxhc2gtY2hlbm5haS1rYW5jaGlwdXJhbS10aGlydXZhbGx1ci1zY2hvb2wtaG9saWRheS1kZWNsYXJlZC10b2RheS04NTQ1NzUuaHRtbNIBjQFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvdGFtaWwtbmFkdS9yYWluLWNvbnRpbnVlcy10by1sYXNoLWNoZW5uYWkta2FuY2hpcHVyYW0tdGhpcnV2YWxsdXItc2Nob29sLWhvbGlkYXktZGVjbGFyZWQtdG9kYXktODU0NTc1Lmh0bWw?oc=5