சென்னை : சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை : டிச.22,23 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 116 விளம்பரப் பலகைகள் மற்றும் 236 விளம்பரப் பதாகைகள் கண்டறியப்பட்டு, அவை மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விளம்பரப் பலகைகளை அகற்றும் இப்பணியில் சென்னை மாநகராட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjUyNzjSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNTI3OC9hbXA?oc=5