தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

13-01-2323 முதல் 14-01-2023:- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்த பட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதம் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் இரவு நேடங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

15-01-2023 முதல் 17-01-2023:- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMigAFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvdGFtaWwtbmFkdS1saWtlbHktdG8td2l0bmVzcy1kcnktd2VhdGhlci1mb3ItNS1kYXlzLWNoZW5uYWktbWV0ZW9yb2xvZ2ljYWwtY2VudHJlLTg3ODA1MNIBhAFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL2FtcC9OZXdzL1N0YXRlL3RhbWlsLW5hZHUtbGlrZWx5LXRvLXdpdG5lc3MtZHJ5LXdlYXRoZXItZm9yLTUtZGF5cy1jaGVubmFpLW1ldGVvcm9sb2dpY2FsLWNlbnRyZS04NzgwNTA?oc=5