புதுச்சேரி- சென்னை இடையே ஏ.சி. பஸ் இயக்கம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

புதுச்சேரி

பி.ஆர்.டி.சி. சார்பில் புதுச்சேரி – சென்னை இடையே மீண்டும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஏ.சி. பஸ்கள்

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் புதுச்சேரி- சென்னை இடையே ஏ.சி. வால்வோ பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன.

கொரோனா கட்டுப்பாடு முடிவுக்கு வந்த பிறகு மற்ற பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் புதுச்சேரியில் இருந்து சென்னை, கடலூருக்கு இயக்கப்பட்டு வந்த வால்வோ பஸ்கள் மட்டும் இயக்கப்படாமல் இருந்தது.

மீண்டும் இயக்கம்

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் மீண்டும் புதுச்சேரி- சென்னை இடையே கிழக்கு கடற்கரை சாலை வழியாக தினமும் 4 வால்வோ ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதில் முன்பதிவு இல்லாத பஸ் புதுவை பஸ்நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் புறப்படுகிறது. மறுமார்க்கமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து காலை 10.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் புறப்படுகிறது.

முன்பதிவு பஸ்

இதேபோல் முன்பதிவு செய்யக்கூடிய பஸ் புதுவையில் இருந்து காலை 5.30 மணிக்கும், மதியம் 1.30 மணிக்கும் செல்கிறது. இந்த பஸ் கோயம்பேட்டில் இருந்து காலை 9.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் புதுவைக்கு புறப்படுகிறது. இதற்கு புதுவை புதிய பஸ் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் மற்றும் பஸ் இந்தியா ஆப் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்்கான பஸ் கட்டணம் ரூ.263 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiY2h0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vbmV3cy9wdWR1Y2hlcnJ5L2FjLWJldHdlZW4tcHVkdWNoZXJyeS1hbmQtY2hlbm5haS1idXMtb3BlcmF0aW9uLTg3OTc1NdIBZ2h0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL25ld3MvcHVkdWNoZXJyeS9hYy1iZXR3ZWVuLXB1ZHVjaGVycnktYW5kLWNoZW5uYWktYnVzLW9wZXJhdGlvbi04Nzk3NTU?oc=5