திடீர் பரபரப்பு.. ஆஞ்சியோ சிகிச்சைக்காக.. துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை மருத்துவமனையில் அனுமதி! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஆஞ்சியோ சிகிச்சைக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்… அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை தந்துள்ளது.

ஏற்கனவே அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. 2018-ல் கோவை கணமதி காந்திமாநகர் பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் முதுகுவலிக்கு சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார்.

அங்கு அவருக்கு ஆயில் மசாஜ், ஸ்டீம் பாத், எண்ணெய் குளியல் உள்பட பல்வேறு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சைகள் தரப்பட்டன.. இதற்காக ஒரு வாரம், 5 நாட்கள் என பலமுறை கோவை ஆஸ்பத்திரிக்கும் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு சென்னை தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் திடீரென அனுமதிக்கப்பட்டார்.. ஆஞ்சியோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. டாக்டர்கள் அவருக்கு தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

நேற்றிரவு ஆஞ்சியோ சிகிச்சை முடிந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று துணை முதல்வரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.. அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றார்.. தற்போது, வழக்கமான பரிசோதனைகள் முடிந்த நிலையில், இன்று மாலையே துணை முதல்வர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

imageமகாராஷ்டிராவில் இருந்து ஹரித்துவாருக்கு ரயிலில் திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாளைய தினம் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை கொரோனா தடுப்பு குறித்த முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளார்.. இந்நிலையில் துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/dy-cm-o-panneerselvam-admits-in-chennai-private-hospital-386473.html