சென்னை: ரன்னிங்கில் பஞ்சரான டயர்! – மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியான இளைஞர் – Vikatan

சென்னைச் செய்திகள்

ரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பொதுமக்கள் மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலமேலு சம்பவ இடத்துக்கு வந்தார்.

தங்கராஜின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தங்கராஜின் பைக் பஞ்சரானதே இந்த விபத்துக்குக் காரணம் என்றும் மேம்பாலத்திலிருந்து அவர் கீழே விழுந்ததே உயிரிழப்புக்கு காரணம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரரணயில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://www.vikatan.com/news/accident/youth-died-in-road-accident-near-chennai-madhavaram