சென்னை: `செல்போனுக்கு வந்த முகம் சுளிக்கவைக்கும் வீடியோக்கள்!’ – இளைஞரைச் சிக்கவைத்த தாய், மகள் – Vikatan

சென்னைச் செய்திகள்

அந்த வீடியோ, போட்டோஸ்களைப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். தைரியமாக காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாரளித்தார். அதோடு ஆபாசத் தகவல்களை அனுப்பிய விமல்ராஜை தாயும் மகளும் சேர்ந்து சென்னைக்கு வரவழைத்து சிக்கவைத்துள்ளனர். விமல்ராஜிடம் விசாரித்தபோது ஆபாசத் தகவல்களை அனுப்பியதை அவர் ஒப்புக் கொண்டார். அவரின் செல்போனிலிருந்து ஆபாசத் தகவல்கள் சென்றதையும் உறுதிப்படுத்தியுள்ளோம்.

புகார் கொடுத்த பெண், ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார். விமல்ராஜுக்கு பெண்ணின் செல்போன் எண்ணை ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் அனுப்பியவர் யார் என்று விசாரித்துவருகிறோம். அது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். விமல்ராஜின் ஃபேஸ்புக்கில் நட்பாக முதலில் பழகி, அவரைச் சிக்கலில் சிக்க வைத்தவர் யாரென்று விசாரித்துவருகிறோம்’’ என்றனர்.

“அறிமுகம் தெரியாதவர்களிடம் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்ததால், இன்று ஆன்லைன் டெலிவரிபாய் வேலை பார்த்த இளைஞர் சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்’’ என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-in-choolaimedu-over-harassment-complaint