சென்னை: `காட்டிக் கொடுத்த செல்போன் சிக்னல்! – நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன இன்ஃபார்மர் – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை தி.நகர், சாரதாம்பாள் தெருவில் வசித்துவருபவர் நூருல் ஹக் (71). கடந்த 30.9.2020-ல் அவரையும் அவரது மனைவியையும் கட்டிப்போட்டு 250 சவரன் நகை, பணம் மற்றும் காரை 8 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீஸார் வழக்கு பதிவு சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களைத் தேடிவந்தனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் நூருல்லின் உறவினரான மொய்தீன் என்பவருக்குத் தொடர்பிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடந்தது.

எல்லப்பன்

அவரின் செல்போன் நம்பரை போலீஸார் ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் குறித்த ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த மகேஷ் (33), செங்கல்பட்டு ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த சுகுமார் (27), செங்கல்பட்டு கீரப்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ் (25), சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் (45), சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த விஜய் (38), தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஆலன் (39), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ்குமார் (27), கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த தம்பித்துரை என்கிற அபேன் (40) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 பைக்குகள், 3 கத்திகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-8-over-t-nagar-theft-case