என்ன அடிப்படையில் தகரம் அடிக்கீறீர்கள்? மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விடு மற்றும் தெருவை தகரம் மூலம் தடுப்பது தமிழகம் முழுக்க பரவலாகி வருகிறது. இது மனிதாபிமானமற்ற செயல் என்று பலரும் விமர்சித்து வந்தாலும், தனிமைப்படுத்தல் என்பதைக் காரணம் காட்டி நியாயப்படுத்தி வருகிறது அரசுத் தரப்பு.

இந்நிலையில், தகரம் அடிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும், இதனை நிறுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவி செயப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுத் தரப்புக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

1. கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு, அவர்கள் வசிக்கும் பகுதியில் என்ன காரணத்திற்காக தகரம் அடிக்கிறீர்கள்?

2. எந்த விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது. தகரம் அடித்த வீடுகளில் உள்ளவர்கள் வெளியே வரமாட்டார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அவர்கள் வரவில்லை என்று எப்படி தெரியும்.

3. மாநகராட்சி அதிகாரிகள் அங்கு போவதில்லை. தகரம் அடிக்க யாருக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது?

4. ஒருமுறை அடித்த தகரத்தை எத்தனை முறை பயன்படுத்துவீர்கள்?

என, சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். பின்னர் இந்த மனுவுக்கு, தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

நாம் போராட வேண்டியது நோயுடன் தானே ஒழிய, நோயாளியுடன் அல்ல என்று சாமானியர்களுக்கு மட்டும் அறிவுரை சொல்லும் அரசாங்கம், குறைந்தபட்சம் இது உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துமே என்றாவது சிந்தித்திருக்கலாம் என்பதே தகர விவகாரத்தில் எழும் முதல் கேள்வி.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/madras-high-court-questions-chennai-corporation-on-blocking-corona-patients-home-by-metal-sheets/articleshow/78525453.cms