ஒருபக்கம் சலுகை தந்து மறுபக்கம் பிடுங்குவதா? சென்னை மாநகராட்சிக்கு ஸ்டாலின் கேள்வி – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னை மாநகராட்சிக்கு மிக முக்கிய வருவாய் மூலங்களில் ஒன்றாக சொத்து வரி உள்ளது. ஒவ்வொரு நிதியாண்டின் அரையாண்டிலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் சொத்து வைத்திருப்போர் அதற்கான சொத்து வரியை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். இந்த வரியைத்தான் கட்ட முடியவில்லை என்று ரஜினிகாந்த் உயர் நீதிமன்றம் சென்றார்.

அதே சமயம், சரியான தேதிக்குள் முறையாக வரி செலுத்தியவர்களுக்கு சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. செலுத்திய சொத்து வரியில் 2% அல்லது அதிகப்ட்சமாக 5000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

மூன்று தினங்களுக்கு முன்பு , “குறித்த கால அவகாசத்துக்குள் சொத்து வரி செலுத்திய உரிமையாளர்களுக்கு மொத்தமாக 4.56 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது” என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

சொத்து வரி செலுத்தினார் ரஜினிகாந்த்… பணம் வந்தது எப்படி?

இந்நிலையில், இந்த ஊக்கத்தொகையை அதிகரித்துத் தரும்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரையாண்டு சொத்து வரியாக ரூபாய் 5 ஆயிரத்துக்குள் செலுத்தும் நபர்களுக்கு ஊக்கத்தொகையை 10 சதவீதமாக அதிகரியுங்கள்.



அரையாண்டு முடிந்து சொத்து வரி செலுத்துவோருக்கான ஊக்கத்தொகை கால அவகாசத்தை 45 நாளாக அதிகரியுங்கள். அரையாண்டு முடிந்து 15 நாளில் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

License renewal: தொழில் உரிமம் புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு… எதுவரை தெரியுமா?

அப்படிச் செலுத்தத் தவறினால் 16ஆவது நாளில் இருந்து 2 சதவீத அபராதம் வசூல் என்று மாநகராட்சி கூறியுள்ளது. வலது கையால் ஒரு சலுகையைக் கொடுத்து விட்டு, இடது கையால் பறித்துக் கொள்வது போல் அறிவிப்பு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/stalin-statement-on-chennai-corporation-property-tax-collection-scheme/articleshow/78727800.cms