சென்னை: `அவனைக் கொலை செய்’ – காதலியின் ஆசையை நிறைவேற்ற சிறைக்குச் சென்ற இளைஞர்! – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட கிருஷ்ணாவின் உறவினர் பன்விமால் என்கிற ராகுல். இவரின் காதலி 16 வயது சிறுமி ஆகியோர் ரைஸ்மில்லிலேயே தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். 16 வயது சிறுமி, ராகுலுக்கு உணவு சமைத்து கொடுத்து வந்திருக்கிறார். கடந்த 13-ம் தேதி இரவு 10.30 மணியளவில் ராகுலின் காதலியான சிறுமியை சொந்த ஊருக்குச் செல்லும்படி கிருஷ்ணா கூறியிருக்கிறார். அதனால், சிறுமிக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது சிறுமியை கிருஷ்ணா அடிக்க முயன்றதாகத் தெரிகிறது.

கைது
representational image

அப்போது ராகுல் அங்கு இல்லை. அவர் வீட்டுக்கு வந்தததும் கிருஷ்ணா, தன்னை அடிக்க வந்த தகவலை சிறுமி கூறி கதறி அழுதிருக்கிறார். அதோடு, கிருஷ்ணாவைக் கொலை செய் என்று ஆவேசமாகத் தெரிவித்திருக்கிறார். `அதுதான் என்னுடைய ஆசை என சிறுமி தெரிவித்திருக்கிறார். அதனால் காதலிக்காக கிருஷ்ணாவை ராகுல் கொலை செய்துவிட்டு சிறுமியுடன் தப்பிச் சென்று விட்டார். இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராகுலை சிறையில் அடைத்திருக்கிறோம். சிறுமி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-north-indian-youth-and-his-lover-in-murder-case