சென்னை: `எங்க அம்மா நீதிபதி’ – சட்டக் கல்லூரி மாணவியை ஏமாற்றிய இளைஞர்! – Vikatan

சென்னைச் செய்திகள்

புகாரின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாலாஜியைத் தேடிவந்தனர். அவர் தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் சட்டக் கல்லூரி மாணவியின் வீட்டுக்குச் சென்ற பாலாஜி, அங்கு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அதனால், பாலாஜியைப் பிடித்த மாணவியின் குடும்பத்தினர், காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்து அவரை ஒப்படைத்தனர். இதையடுத்து பாலாஜியை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கைது
Representational Image

போலீஸ் விசாரணையில் பாலாஜி, தன்னுடைய அம்மாவை நீதிபதி என்று சட்டக் கல்லூரி மாணவியிடம் கூறியதாகத் தெரியவந்திருக்கிறது. சட்டக் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே போலீஸார் நடவடிக்கை எடுத்ததாக மாணவி தரப்பில் குற்றம்சாட்டுகிறார்கள்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrests-youth-over-harassment-complaint