சென்னை: தாய் ஓட்டுபோட சென்ற நேரம்… விபரீத முடிவை எடுத்த கர்ப்பிணி மகள்! – Vikatan

சென்னைச் செய்திகள்

ஓட்டு போட்டு விட்டு வீட்டுக்கு வந்த நீலவேணி, நீண்ட நேரம் கதவை தட்டியும் ஷோபனா திறக்கவில்லை. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு கதவை உடைத்து நீலவேணி உள்ளே சென்றார். அப்போது படுக்கையறையில் ஷோபனா, துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நீலவேணி கதறி அழுதார். அவரின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ஷோபனாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஷோபனா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஷோபனாவின் சடலத்தை மீட்ட வேளச்சேரி போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நீலவேணி கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ, கனகராஜ் வழக்கு பதிவு செய்து ஷோபனாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்து வருகிறார். நீலவேணியிடம் விசாரித்தபோது ஷோபனாவின் கணவர் வீட்டில் எந்தவித கொடுமையும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதனால் ஷோபனாவின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 8 மாதங்களுக்குள் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-pregnant-lady-commits-suicide-while-her-mother-went-to-poll