வழிபறியில் இறங்கிய சென்னை போலீஸ்; ‘வடிவேல்’ போல் பணம் இழந்த மாணவன்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அதே பகுதியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த சிறுவன் வீட்டில் இருந்த ரூ. 63 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் பஸ் மூலம் சென்னை வந்துள்ளார். பின்னர் எங்கு செல்வது? என தெரியாமல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இருந்துள்ளார்.

கொரோனா மருந்து கூவிகூவி விற்பனை; சுற்றிவளைத்த போலீஸ் !

அப்போது இரவு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த கோயம்பேடு போலீஸ்காரர்களான வேல்முருகன் மற்றும் அருண்கார்த்திக் ஆகியோர் மாணவனை அழைத்து விசாரித்துள்ளனர். பின்னர், சந்தேகத்தின்பேரில் அவரது பையை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, மாணவனின் பையில் ரூ.63 பணம் இருப்பதை கண்ட போலீஸ்காரர்கள் அதை எடுத்துக் கொண்டு மாணவனை விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. பிறகு எங்கு செல்வது? என்று தெரியாமல் தவித்த மாணவன் தனது பெற்றோருக்கு தெரிவித்து அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சென்னைக்கு விரைந்து வந்துள்ளனர். பின்னர், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக 2 போலீஸ்காரர்களிடமும் தீவிர
விசாரணை நடைபெற்று வருகிறது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/two-policemen-are-enquired-for-robbing-from-a-boy-in-chennai/articleshow/82324197.cms