COVID-19 Recruitment : மாத ஊதியம் ரூ. 60,000.. மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப… – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
கொரனா தடுப்பு பணிக்காக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. மாத ஊதியம் ரூ60 ஆயிரத்தில் 115 மருத்துவ அலுவலர்கள், மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் 189 செவிலியர் பணிக்கான அறிவிப்பானையை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

ஒராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் 115 மருத்துவர்கள் 189 செவிலியர் பணியிடங்களுக்களை நிறப்புகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.விண்ணப்பித்த அனைவரும் நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

வேலைக்கு விண்ணப்பிக்க நிபந்தனைகள் :

  • மேற்கண்ட பணி தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் கிடையாது.
  • தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேருவதற்கான சுய விவர ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டவர்கள் 28.05.2021 அன்று பணியில் சேரவேண்டும்.

நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

அங்கிகரிக்கப்பட்ட கல்லூரியில் மருத்துவம் படித்தவர்கள் covid19.chennaicorporation.gov.in/covid/medical/officer/

அங்கிகரிக்கப்பட்ட கல்லூரியில் நர்சிங் படித்தவர்கள் covid19.chennaicorporation/covid/nurse

என்ற இணைய முகவரியில் 26/5/2021 இரவு 8மணிக்குள் அசல் சான்றிதளோடு விவரங்களை பதிவு செய்யவேண்டும். 27/5/2021 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நேர்காணல் நடைபெறும்.

Published by:Sankaravadivoo G

First published:

Source: https://tamil.news18.com/news/employment/chennai-corporation-recruitment-2021-skv-470011.html