“விரைவில் செயலாளர்கள் குழு ஏற்படுத்தப்படும்” – சென்னை துறைமுக தலைவர் தகவல் – தந்தி டிவி

சென்னைச் செய்திகள்

மத்திய அரசின் கதி சக்தி திட்டத்தின் மூலம் ரயில்வே, துறைமுகம், நீர் வழி போக்குவரத்து, சாலை போக்குவரத்து உட்பட 16 துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று துறைமுகத் தலைவர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுக அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதன் மூலம் பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைந்து பணிகள் விரைவாக நடைபெறும் என்று தெரிவித்தார். பிரதமரின் கதி சக்தி திட்டத்தை செயல்படுத்த அதிகாரத்துடன் கூடிய செயலாளர்கள் குழு ஏற்படுத்தப்படும் என்றும், அமைச்சரவை செயலாளர் இதற்கு தலைமை ஏற்பார் என்றும் சுனில் குமார் பலிவால் தெரிவித்தார். சென்னை துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட ஈரடுக்கு விரைவு மேம்பாலம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது குறித்து விரிவான திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடர்ந்து தாமதமாவதாக கூறிய சுனில் குமார் பலிவால், தற்போது இத்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

Source: https://www.thanthitv.com/News/TamilNadu/2021/10/14082038/2793651/pm-on-sakthi-gantha-das.vpf.vpf