சென்னை டூ சேலம்… விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

மத்திய அரசின் உடான் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள சிறுநகரங்களில் இருந்து மாநிலங்களில் தலைநகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

2018 மார்ச் முதல் ட்ரூ ஜெட் நிறுவனம் இந்த மார்க்கத்தில் விமானங்களை இயக்கி வந்தது. வெறும் 1,450 ரூபாயில் சில நிமிடங்களிலேயே சேலத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்துக்கும் பயணித்து விடலாம் என்பதால் இந்த விமான சேவைக்கு தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என பலதரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த நிலையில், 2021 மார்ச் வரை விமானங்களை இயக்க அனுமதி பெற்றிருந்த ட்ரூ ஜெட் நிறுவனம், அதன் பிறகு அனுமதியை புதுப்பி்க்காததால் சேலம்- சென்னை மார்க்கத்தில், கிட்டதட்ட கடந்த ஓராண்டாக விமானங்கள் இயக்கப்படவில்லை.

ரயில்வே அதிகாரிகளை சுளுக்கெடுத்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!

இந்த வழித்தடத்தில் மீண்டும் விமானங்களை இயக்க பல்வேறு தரப்பினரும் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சேலம் மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, இந்த தொகுதியின் திமுக எம்பி பார்த்திபன், இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையிலும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடமும் இதுதொடர்பாக தொடர்ந்து பேசி வந்தார்.

இதனையடுத்து, ”உடான்’ திட்டத்தின்கீழ் ‘டர்போ மெகா ஏர்வேஸ்’நிறுவனம், சேலம் -சென்னை இடையே விமானங்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் (2022 மார்ச்) இந்த சேவை துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் விஜய்குமார்சிங், சேலம் எம்பி பார்த்திபனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/aviation-ministry-sources-says-salem-chennai-domestic-flight-service-likely-will-begin-soon/articleshow/89445096.cms