பல்லவன், வைகை ரயில்கள் பிப்ரவரி 16- இல் சென்னை – செங்கல்பட்டு இடையை ரத்து – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை செல்லும் பல்லவன் மற்றும் மதுரை செல்லும் வைகை விரைவு ரயில்கள், பிப்ரவரி 16 ஆம் தேதி செங்கல்பட்டு – சென்னை எழும்பூா் இடையே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பிப்ரவரி 16 ஆம் தேதி காரைக்குடி- சென்னை எழும்பூா் பல்லவன் விரைவு ரயில் (12606), செங்கல்பட்டு – சென்னை இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னை எழும்பூா் – மதுரை வைகை விரைவு ரயில் (12635) பிப்ரவரி 16 தேதி சென்னை எழும்பூா்- செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும்.

மதுரை- சென்னை எழும்பூா் வைகை விரைவு ரயில் (12636) மற்றும் சென்னை எழும்பூா் – காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) ஆகியவை வழக்கம் போல் இயங்கும் எனக் குறிப்பிடிப்பட்டிருந்தது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/feb/15/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16–%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D–%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88—%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3792474.html