சென்னையில் திக் திக்.. நடு ரோட்டில்.. அத்தனை பேர் பார்க்கும்போது.. வாலிபரை வெட்டிய பள்ளி மாணவன் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 20 வயது இளைஞரை கத்தியால் வெட்டிய பள்ளி மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் வெட்டிவிட்டு தப்பியோடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (20). டெலிவரி பாயாக பணியாற்றி வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவனை கேலி கிண்டல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், கார்த்திக் இரு வாரங்களுக்கு முன் பள்ளி மாணவனான 17 வயது சிறுவனை அடித்து மிரட்டி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை பகுதியில் கார்த்திக், இருசக்கர வாகனத்தில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார்.

132 ஆவது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி132 ஆவது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

17 வயது சிறுவன்

அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்த 17 வயது பள்ளி மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் பலமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் கார்த்திக் சுருண்டு விழுந்தார். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ராயப்பேட்டை போலீசார் கார்த்திக்கை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவி சிகிச்சை

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற கார்த்திக் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட ராயப்பேட்டை போலீசார் கார்த்திக்கை வெட்டிவிட்டு தப்பியோடிய 17 வயது பள்ளி மாணவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுவன்

விசாரணையில் தன்னை கார்த்திக் தொடர்ந்து கேலி கிண்டல் செய்தும், அடித்தும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், அதை தான் வீட்டில் கூறியபோதும் பெற்றோர் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் போலீஸாரிடம் மாணவன் தெரிவித்துள்ளார்.

ஆத்திரத்தில் வெட்டியதாக வாக்குமூலம்

அதனால் கார்த்திக் மீது இருந்த ஆத்திரத்தில் தானே பல்லாவரம் சந்தைக்குச் சென்று கத்தியொன்றை வாங்கிக் கொண்டு வந்து கார்த்திக்கை வெட்டியதாக மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் பள்ளி மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கெல்லிஸ் காப்பகத்தில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
CCTV footages released in 17 years old boy attacks 20 years college student in Chennai Royapettah.

Source: https://tamil.oneindia.com/news/chennai/cctv-footages-released-in-17-years-old-boy-attacks-20-years-college-student-451963.html