சென்னை: ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு; படியிலிருந்து கீழே விழுந்து பலியான வடமாநில இளைஞர்..! – Vikatan

சென்னைச் செய்திகள்

ரோனி சேட் கீழே விழுந்ததைக் கண்ட சகபயணிகள் கூச்சலிட்டனர். இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவமறிந்து வந்த போலீஸார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரோனி சேட்டை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் கூறியிருக்கின்றனர். இதனையடுத்து, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும், அவர் உயிரிழந்த சம்பவம் அவரின் உறவினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை

இது குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது, கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (19), விஜய் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் இருவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidmh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL2dvdmVybm1lbnQtYW5kLXBvbGl0aWNzL2NyaW1lL2EteW91dGgtZGllcy13aGlsZS10cnlpbmctdG8tY2F0Y2gtYS1jZWxsLXBob25lLXRoaWVmLW9uLWEtdHJhaW7SAYABaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L2dvdmVybm1lbnQtYW5kLXBvbGl0aWNzL2NyaW1lL2EteW91dGgtZGllcy13aGlsZS10cnlpbmctdG8tY2F0Y2gtYS1jZWxsLXBob25lLXRoaWVmLW9uLWEtdHJhaW4?oc=5