கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.
சென்னை,
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை பெய்தது. ஆலந்தூர், ஐயப்பந்தாங்கல், போரூர், அம்பத்தூர், மடிப்பாக்கம், வடபழனி ,ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், பாரிவாக்கம், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், ராயப்பேட்டை, கொளத்தூர், ஆதம்பாக்கம், கோட்டூர்புரம், மயிலாப்பூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், ராமாபுரம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் வெப்பம் சற்று தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Source: https://www.dailythanthi.com/News/State/2020/06/21223944/Rain-Lashed-in-parts-of-chennai.vpf