cyclone Nivar: மெட்ராஸ் அணு மின் நிலையம் பாதிக்கப்படுமா? பரபரப்பு… – Zee Hindustan தமிழ்

சென்னைச் செய்திகள்

Madras Atomic Power Station Cyclone Nivar, Chennai, Kalpakkam, Nuclear Power Corporation of India Limited, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், மெட்ராஸ் அணு மின் நிலையம், சென்னை அணுமின் நிலையம், சூறாவளி நிவர் நிவர் புயலை எதிர்கொள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நிவார் சூறாவளி சென்னையை தாக்கும்போது பொதுமக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதே நேரத்தில் கல்பாக்கம் மெட்ராஸ் அணு மின் நிலையம் எப்படி பாதுகாக்கப்படுகிறது? 

சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மெட்ராஸ் அணுசக்தி நிலையம். வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் சூறாவளியை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூறாவளி பாதுகாப்பு இயந்திரங்கள் இயங்கப்பட்டுள்ளன. அணுமின் நிலைய அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். வானிலை அறிவிப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைப்படும்போது தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மெட்ராஸ் அணு மின் நிலையம் மற்றும் அதை ஒட்டிய வங்காள விரிகுடா பகுதியில் ‘நிவார்’ சூறாவளியின் தாக்கத்தை எதிர்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Nuclear Power Corporation of India Limited) நிறுவனத்தின் கீழ் செயல்படும் மெட்ராஸ் அணு மின் ஆலை  தெரிவித்துள்ளது.  அணுசக்தி நிறுவன நிலைய இயக்குநர் ஸ்ரீனிவாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

புதன்கிழமை (நவம்பர் 25) மாலை நேரத்தில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புயல் கரையை கடக்கக்கூடும் ஏற்படும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.  கடலோரப் பகுதியில் மணல் மூட்டைகளை வைப்பது, புயல் வடிகால்களை அகற்றுவது, ஆலை கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்பை ஆய்வு செய்வது உள்ளிட்ட ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

நிவர் புயலின் தாக்கத்தால் பல மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசுகிறது. இதை கருத்தில் கொண்டு, மக்களின் பாதுகாப்புக்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி நவம்பர் 25ஆம் தேதி (புதன்கிழமை) மாநிலத்திற்கு பொது விடுமுறை அறிவித்துள்ளார். 

நிவர் சூறாவளி புதுச்சேரி (Puducherry) யூனியன் பிரதேசத்தின் கிழக்கு-தென்கிழக்கு திசையில் சுமார் 410 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை கடுமையான சூறாவளியாக தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நிலப்பகுதியை கடக்கும் போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசும். சூறாவளி நிவரின் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வியாழக்கிழமை வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி | நிவர் புயல்: 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், ஆன்மீகம், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR 

Source: https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-nivar-will-affect-the-madras-atomic-power-station-350099