`நாளை சாம்பிள்ஸ் கொடுக்கிறேன்; இன்று சந்திக்கவும்!’ -நோயாளிக்கு அதிர்ச்சிகொடுத்த சென்னை டாக்டர் – Vikatan

சென்னைச் செய்திகள்

கிளினிக்கில் டாக்டரைத் தவிர வேறு யாருமில்லை. என்னைப் பார்த்ததும் சிரித்தார். அப்போது, டாக்டரின் சிரிப்பின் அர்த்தம் எனக்கு புரியவில்லை. பின்னர், என்னிடம் உடல் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கிளினிக்கிலிருந்து அருகில் உள்ள ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு சென்றதும் கதவு, ஜன்னல்களைப் பூட்டினார். அந்த அறையில் நானும் டாக்டரும் மட்டுமே இருந்தோம்.

டாக்டரின் மருந்துச் சீட்டு

பின்னர், அவர் எனக்கு ஊசி போட்டார். அதன்பிறகு நான் அரைமயக்கத்தில் இருந்தேன். பின்னர் அவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மயக்கத்தில் இருந்தால் அதை என்னால் தடுக்க முடியவில்லை. மயக்கம் தெளிந்த பிறகு அவரிடம் நான் சண்டை போட்டேன். பின்னர், என்னை வலுக்கட்டாயமாக வெளியில் அனுப்பிவிட்டார். அறையில் நடந்த அந்தச் சம்பவம் எனக்கு மனவேதனையை அளித்தது. உடனே நான் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தேன். பின்னர்தான் எனக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, டாக்டர் கார்த்திக் மீது புகாரளித்தேன். என்னைப் போல மற்ற யாரும் டாக்டரால் பாதிக்கப்படக்கூடாது. அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் வேறு மருத்துவரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

டாக்டர் தரப்பில் விளக்கம் கேட்க கிளினிக்கிற்குச் சென்றபோது பூட்டப்பட்டிருந்தது. அபிராமபுரம் போலீஸாரிடம் கேட்டபோது, `புகாரின் பேரில் டாக்டர் கார்த்திக்கை கைதுசெய்துள்ளோம்’ என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/police-arrested-chennai-doctor-in-sexual-harassment-complaint