சென்னை: பூட்டிய வீட்டுக்குள் ரத்தக்கறை…. சிக்கிய காதல் ஜோடி! – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிசினஸ்மேன் தீபக் வீட்டில் சமையல் வேலை செய்து பார்த்து வந்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த ஹம்தன். இவரின் காதலி நிலா அக்தர் என்கிற ரசியா பேகம் (22). இவர், கொல்கத்தாவைச் சேர்ந்தவர். காதலனைப் பார்க்க ரசியா பேகம் அடிக்கடி சென்னை வருவார். அப்போது நிலாவுக்கும் தீபக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை வந்த நிலா, தீபக் வீட்டில் தங்கியிருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு தீபக், ஹம்தன் ஆகியோர் மதுஅருந்தியுள்ளனர். அப்போது ஹம்தன், தன்னை பட்டுப்புடவை பிசினஸில் பார்ட்னராகச் சேர்த்துக் கொள்ளும்படி தீபக்கிடம் கூறியுள்ளார்.

அதற்கு தீபக், கொரோனாவால் பிசினஸ் டல்லாக இருப்பதாகத் தெரிவித்ததோடு நிலா குறித்து தவறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த ஹம்தன், சமையல் அறையிலிருந்து கத்தியை எடுத்துக் கொண்டு வந்து தீபக்கை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் பெட்ரோலை ஊற்றி தீபக்கின் வயிற்றுப் பகுதியில் தீ வைத்துள்ளார். அடுத்து மாடியிலிருந்து தீபக்கை கீழே தள்ளி விட்ட ஹம்தன், காதலி ரசியா பேகத்தை அழைத்துக் கொண்டு விமானம் மூலம் சொந்த ஊருக்குச் தப்பிச் செல்லும்போது பிடித்துவிட்டோம்” என்றார்.

காவல் நிலையத்தில் காதல் ஜோடியிடம் நடந்த விசாரணையில் பாலியல் தொழிலில் கிடைத்த பணத்தைப் பங்குபோடுவதில் தகராறு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதுதொடர்பாக இருவரிடமும் தீவிர விசாரணை நடந்தது. மேலும் சிகிச்சையிலிருக்கும் தீபக்கிடம் விசாரித்தால்தான் உண்மையில் என்ன நடந்தது என்நு தெரியவரும் என்கின்றனர் போலீஸார்.

தொடர்ந்து காதல் ஜோடியிடம் போலீஸார் தீபக்கைக் கொலை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணைக்குப்பிறகு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இரவு பணியிலிருந்த போலீஸ் டீம் சம்பவம் நடந்த ஒருமணி நேரத்துக்குள் துரிதமாக செயல்பட்டு ஹம்தன், அவனின் காதலி ரசியா பேகத்தை பிடித்ததற்கு துணை கமிஷனர் விக்ரமன் பாராட்டியுள்ளார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-businessman-stabbed-by-cook-who-arrested-with-his-lover