சென்னை சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக தகவல்..! பாஜக பிரமுகர் கைது விவகாரம் – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னை வியாசர்பாடி அருகே 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சகிதா பானு (22), செல்வி (50), அவரது மகன் மதன்குமார் (35), மகள் சத்யா (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேற்கண்டவர்கள் இதுபோல, பல சிறுமிகளை மிரட்டி வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.

தொடர்ந்து இந்த வழக்கில் மகேஸ்வரி, வனிதா, ஈஸ்வரி உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். கைதான சத்யா (23) அளித்த வாக்குமூலத்தில் தான் வழக்கில் முக்கியத் தகவல்கள் கிடைத்தன . அதன்படி, வண்ணாரபேட்டையை சேர்ந்த விபசார தரகரும், பாஜக பிரமுகருமான ராஜேந்திரன் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.



அவரை விசாரித்ததில் அவர் ஏழை சிறுமிகளை பாலியல் தொழில் ஈடுபடுத்தியதும், பல துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு சிறுமிகளை சப்ளை செய்ததும் தெரிந்தது. அப்படி பாதிக்கப்பட்ட சிறுமியை எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி என்பவருக்கும் அனுப்பி வைத்ததாக ராஜேந்திரன் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் புகழேந்தியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட சென்னை வாசிக்கு மனநிலை பாதிப்பு..!

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வேலை வாங்கி வாங்கி கொடுப்பதாக கூறிதான் ராஜேந்திரன் அழைத்து சென்றதும், பின்னர் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியை போலீசார் மீட்க சென்ற போது அவரால் நடக்க கூட முடியாமல் தடுமாறினார் என்று கூறப்பட்டது.

கோப்புப்படம்

ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்ட சிறுமியை கஸ்டமராக வந்த 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வந்துள்ளது. இந்த வழக்கில் பாஜக பிரமுகர், காவல் துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படியான நபர்கள் யார் யார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/crime/chennai-minor-girl-who-recued-from-brothel-reportedly-raped-by-400-people/articleshow/79474041.cms