மாணவி மீது பாலியல் தாக்குதல்… எல்லை மீறினாரா பேராசிரியர்? சிக்கலில் சென்னைப் பல்கலைக்கழகம்! – Vikatan

சென்னைச் செய்திகள்

தேர்வு முடிவுகளில் குளறுபடி இருக்கிறது என்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் முறையிட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மறுகூட்டலுக்கான குழு ஒன்றை நிர்வாகம் அமைத்திருக்கிறது. இந்த 8 மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த வகுப்புக்கும் மறுகூட்டல் நடத்தப்பட்டு, இரண்டு வாரங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்று அந்தக் குழு கூறியிருக்கிறது. முதல்கட்டமாக 8 மாணவர்களுக்கு மறுகூட்டல் செய்து முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மறுகூட்டலில் மிகப் பெரிய மதிப்பெண் வேறுபாட்டில் 8 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து இரண்டு வாரம் கடந்தும் ஒட்டுமொத்த மாணவர்களுக்குமான மறுகூட்டல் முடிவுகள் வெளிவராத நிலையில், இதுகுறித்து துறைத் தலைவர் செளந்தரராஜனைச் சந்தித்து மாணவர்கள் சிலர் முறையிட்டிருக்கின்றனர்.

Source: https://www.vikatan.com/social-affairs/madras-university-students-protest-against-hod