சென்னை:`காரில் நடந்த கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டல்!’ -துணை இயக்குநர் மீது சின்னத்திரை நடிகை புகார் – Vikatan

சென்னைச் செய்திகள்

பாண்டிச்சேரிக்கு மார்ச் மாதம் 22-ம் தேதி சூட்டிங்கிற்கு சென்றிருந்தேன். 25.3.2021-ம் தேதி இரவு நவீன்குமார் என்னை பார்ப்பதற்காக நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்து மேலும் 20,000 ரூபாய் செலவுக்கு வேண்டும் என கேட்டார். அதற்கு நான் என்னிடம் பணம் இல்லை என்று கூறினேன். அதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது என்னை அடித்து துன்புறுத்தினார். மேலும் நவீன்குமார் நான் நடிகை என்பதால் என்னை மீது சந்தேகப்பட்டு பேசினார். அதனால் நான் அவரிடமிருந்து விலக ஆரம்பித்தேன். இந்தநிலையில் அவரது தாயார் பவானி உதயகுமார், என் மகன் நல்லவன் என்றும் உன்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுதான் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்றும் என்னை சமாதானம் செய்தார். அதன்பின்னர் சில நாள்கள் கழித்து நவீன்குமார் என்னிடம் நான் செய்தது தவறு எனவும் நான் உன்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறி மன்னிப்பு கேட்டார்.

நவீன்குமாருடன் டிவி நடிகை ஜெனிஃபர்

அதன்பிறகு நானும் நவீன்குமதாரும் பேசி பழக ஆரம்பித்தேன். இந்தநிலையில் 14.4.2021-ல் சென்னையில் சூட்டிங் நடந்த போது என்னைப் பார்க்க போரூக்கு வந்தார். என்னிடம் உடனடியாக 5,00,000 ரூபாய் பணம் வேண்டும் என்று கூறினார். ஆனால் என்னால் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினேன். ஆனால் சூட்டிங் முடியும் வரை அங்கேயே இருந்தவர், இரவு 11 மணியளவில் எனது காரில் வலுகட்டாயமாக என்னை ஏற்றிக் கொண்டு சென்னை முழுவதும் சுற்றினார். அப்போது எனது ஆடையை கிழித்து காரிலேயே ஆபாசமாக வீடியோ எடுத்தார். கிண்டி, சென்ட்ரல், மாதவரம், வியாசர்பாடி, புரசைவாக்கம், மதுரவாயல், வானகரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் சிங்கபெருமாள் கோயில், வண்டலூர் என்று பல இடங்களுக்கு என்னை ஆபாசமாக முன் சீட்டில் உட்கார வைத்து அழைத்துச் சென்றார்.

Source: https://www.vikatan.com/news/crime/serial-actress-complaint-against-her-lover-and-police-inspector-in-chennai