இதையடுத்து பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் பாதிரியார், பாடகியின் தங்கை கணவர், பாடகியின் தங்கை, உறவினர் ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “நடிகர் விக்ரம் பிரபு நடித்த படத்தில் பிரபல பாடகி பாடியிருக்கிறார். அவரின் மகளை சாலிகிராமத்தில் உள்ள தங்கை வீட்டில்விட்டுவிட்டு பாடகி வேலைக்குச் சென்றிருக்கிறார்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தங்கையின் உறவினர் மகன் அன்பாக பேசியிருக்கிறார். அதன்பிறகு அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். அடுத்து உறவினர் குடும்பத்தினருக்கு தெரிந்த பாதிரியாரும் சிறுமியிடம் அநாகரீகமாக நடந்திருக்கிறார். சிறுமி அளித்த தகவலின்படி 4 பேரிடம் விசாரணை நடத்தவுள்ளோம்” என்றனர்.
பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் மதபோதகர் மற்றும் உறவினர்கள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Source: https://www.vikatan.com/news/crime/lady-singer-logged-complaint-against-her-sister-and-relations-in-chennai