சென்னை: யூடியூபர் மதனின் மறுபக்கங்கள்..! – மனைவி கிருத்திகா சிக்கியது எப்படி? – Vikatan

சென்னைச் செய்திகள்

காதல் திருமணம்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், “இன்ஜினீயரிங் படித்து விட்டு, தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் பிரியர்களை குறி வைத்து யூடியூப் சேனல்களை மதன் தொடங்கியிருக்கிறார். அதற்கு அட்மினாக அவரின் மனைவி கிருத்திகா இருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல்களை நடத்தி வந்திருக்கின்றனர். கணவன் மனைவியான மதனும் கிருத்திகாவும் பப்ஜி கேம் பிரியர்கள். பப்ஜி கேம்மில் சூப்பர் சாட்டிங் மூலம் பேசியபடியே லைவ்வாக விளையாட முடியும். அதனால் மதன் லைவ்வாக கேமின் டிரிக்ஸ், டிப்ஸ்களைக் கூறுவார். அந்த விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள் சிறுமிகள் என அனைவரும் மதனின் பேச்சுக்களை ஆர்வமாக கேட்டு ரசித்து வந்திருக்கின்றனர்.

யூடியூபர் மதன்

விளையாடும்போது மதன், அவ்வப்போது பெண்களைக் குறித்து ஆபாசமாக பேசுவார். அதற்கு அவரின் மனைவி கிருத்திகாவும் பதிலளிப்பார். அதைக்கேட்கும் மற்றவர்கள் என்ன விளையாட்டின் போது இப்படி பேசுகிறார்கள் என்று கருதுவதுண்டு. ஆனால் அதை பலர் ரசித்தும் வந்திருக்கின்றனர். இதுதான் மதன் யூடியூப் சேனல் பிரபலமானதற்கு முக்கியகாரணம். மதனின் ஆபாச பேச்சுக்கள், அநாகரீக வார்த்தைகளைக் கேட்க தனி ரசிகர்கள் இருந்தனர். யூடியூப்பில் லட்சக்கணக்கில் சப்க்ரைப்பர்கள் வந்தததும் யூடியூப் சேனல்கள் மூலம் வருமானம் வரத்தொடங்கின. அது கிருத்திகா, மதனின் வங்கி கணக்கில் வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதித்த மதனும் கிருத்திகாவும் நன்கொடை மூலமாகவும் மற்றவர்களை ஏமாற்றி பணத்தை சம்பாதித்தனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-you-tuber-madan-wife